புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலில் 5ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் 5ம் ஆண்டு ஆராதனை விழா நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதில், நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் இசை கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு, இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.