Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்து மாரியம்மன் கோயில் விழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையத்தில் மழை வேண்டி விவசாயிகள் கூட்டுப் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2014
11:01

உத்தமபாளையம்: மழை வேண்டி கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், உத்தமபாளையம் பென்னிகுவிக் சிலை முன் சர்வமத கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 470 ஏக்கரில் நெல் விவசாயம் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மழை பொய்த்து, விவசாயத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. தவிர, போதுமான மழை இல்லாததால், பெரியாறு அணையில் நீர்மட்டமும் கைகொடுப்பதில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு இரண்டாம் போகத்திற்கு பெரியாறு நீரையே விவசாயிகள் நம்பியிருந்தனர். இந்த ஆண்டும் மழை இல்லாமல் பெரியாற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தவிர மழையும் தொடர்ந்து ஏமாற்றி வருவதால், இரண்டாம் போகம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில், மழை வேண்டி கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் பென்னிகுவிக் சிலை முன்பு, விவசாயிகள் சங்கத் தலைவர் தர்வேஷ்முகையதீன் தலைமையில் மும்மத கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மதத்தின் சார்பில் மழைக்காக இறைவனிடம் மவ்லீது வேண்டுதல் தொழுகை நடத்தப்பட்டது. பெரியபள்ளிவாசல் இமாம் மதார் மைதீன், ஷாபிஈ பள்ளிவாசல் இமாம்கள் முகம்மது மீரான், ஷாஜகான், துணை இமாம்கள் அசன், இஸ்மாயில் ஆகியோர் தொழுகை நடத்தினர். கிறிஸ்தவ மதம் சார்பில் ராயப்பன்பட்டி பங்குத்தந்தை ஜோசப் அந்தோணி, அனுமந்தன்பட்டி பங்குத்தந்தை அந்தோணிசாமி ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். இந்து சமயத்தின் சார்பில் ஜெயப்பிரகாஷ் சுவாமிகள் பிரார்த்தனை நடத்தினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுபிள்ளை, விவசாயிகள் சங்க செயலாளர் ஷகுபர் அலி, நிர்வாகிகள் கம்பம் நாராயணன், ராமகிருஷ்ணன், கூடலூர் கலைமன்னன், உத்தமபாளையம் அபுதாஹிர், சையதுலெவை, சின்னமனூர் ராமசுப்பிரமணியன், ராஜா, கோகிலாபுரம் முத்துக்குமார், கருங்கட்டான்குளம் இளங்கோவன், சீலையம்பட்டி ஆர்ம்ஸ்ட்ராங், வயல்பட்டி குபேந்திரன், மார்க்கயன்கோட்டை வெற்றிவேல், உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்ச்செல்வம், சவுந்தர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்து வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar