Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை அமாவாசை: வழிபாடும்.. பிதுர் ... வாடகை பிரச்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கடையடைப்பு! வாடகை பிரச்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் மாசித்திருவிழா: பிப்., 6ல் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
10:01

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா பிப்., 6 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா பிப்., 16 ல் தெப்பத்திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவையொட்டி, முருகன் கோயிலில், பிப்., 6 ல் நடை அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்படும். 1:30 க்கு விஸ்வரூப தரிசனம், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 முதல் 6:30 க்குள் கொடியேற்றமும் நடைபெறும். இரவு பெலி நாயக்கர், அஸ்திரதேவருடன் தந்த பல்லக்கில் எழுந்தருளி 9 சன்னிதிகளில் திருவீதி உலா நடக்கவுள்ளது.பிப்., 10 ல் மேலக்கோயிலில் இரவு 7:30 மணிக்கு குடவருவாயில் தீபாரதணையும், சுவாமியும், அம்பாளும், தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். பிப்., 11 ல் காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா வருகிறார். பிப்., 12 ல் காலை 4:30 மணிக்கு சண்முக பெருமானின் உருகு சட்ட சேவையும், காலை 9:00 மணிக்கு வெட்டி வேர் சப்பரத்தில் சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, அல்கோர, தீபாராதனை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு சுவாமி சிவப்பு சாத்தி, தங்க சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. பிப். பிப்., 13 ல் வெள்ளி சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி வீதியுலா வருகிறார். பின் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. காலை 11:30 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில், சுவாமி பச்சை சாத்தி வீதியுலா வருகிறார். பிப்., 14 ல் தங்க கைலாய பர்வத வாகனத்தில் சுவாமியும்,வெள்ளி கமல வாகனத்தில் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பிப்., 15 ல் காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பிப்., 16 ல் தெப்பத்திருவிழாவுடன், மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் பொறுப்பு குணசேகரன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் கூடுதல் முன்பதிவு மையம், குடி நீர், சுகாதார வசதிகள், பாதுகாப்பு, இடையூறு இல்லாதபோக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar