பதிவு செய்த நாள்
30
ஜன
2014
11:01
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தை ஒட்டி, சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே சமயத்தில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், பால், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் சிவலோநாதருக்கும், நந்திக்கும் மாலை 4.30 மணியில் இருந்து 5.15 மணிக்குள் அபிஷேக பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து, பூக்களால் அலங்காரம் செய்து மாலை 6.00 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, சிவலோகநாதரையும், நந்தியையும் வழிப்பட்டனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், பொன்மலை வேலாயுதசாமி, அரசம்பாளையம் திருநீலகண்டர், பெரியகளந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் போன்ற கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.