புதுச்சேரி: ஏம்பலம் அடுத்த நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் கோவிலில், தை அமாவாசை உற்சவம் இன்று (30ம் தேதி) நடக்கிறது.அதையொட்டி காலை 10.00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு, சுவாமி சன்னதி புறப்பாடு, 7.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, சாற்றுமுறை, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அறங்காவலர் செ#துள்ளார்.