பதிவு செய்த நாள்
30
ஜன
2014
11:01
சாத்தூர்: இருக்கன்குடி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டதில்,பக்தர்கள் காணிக்கையாக, ரூ. 30 லட்சம் வசூலானது. இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள், இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் தனபாலன், மடப்புரம் உதவிஆணையர் சுந்தரமூர்த்தி, விருதுநகர் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகன், பரம்பரைஅறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி முன்னிலையில் திறக்கப்பட்டன. மகளிர்சுயஉதவிக்குழு பெண்கள்
மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். கடந்த ஒரு மாதத்தில், பக்தர்கள் காணிக்கையாக, 30லட்சத்து 44ஆயிரத்து 246 ரூபாய், 93கிராம் தங்கம் ,140 கிராம் வெள்ளி, காணிக்கையாக கிடைத்தது.