புதுக்கோட்டை: பத்மாவதித் தாயார் உடனுறை சீனிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று காலை பட்டாச்சாரியார்களால் புனித நீரூற்றி குடமுழுக்கு நடைபெற்றது.