Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்கேடு அடையும் குச்சனூர் ... திருப்பதியில் குளு குளு அறையில் காணிக்கை முடி! திருப்பதியில் குளு குளு அறையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாராது வந்த அமைச்சர்கள்: பசியில் வாடிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 பிப்
2014
10:02

சென்னை: அண்ணாதுரை நினைவு தினத்தை ஒட்டி, கோவில்களில் நடந்த சமபந்தி விருந்துக்கு, அமைச்சர்கள் தாமதமாக வந்ததால், சாப்பிட வந்தவர்கள், பசியால் தவித்தபடி காத்திருந்தனர். அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, முக்கிய கோவில்களில், சமபந்தி விருந்து நடக்கும் என, அரசு அறிவித்தது.சென்னையில், 31 கோவில்களில், அமைச்சர்களும், மூன்று கோவில்களில், சபாநாயகர், துணை சபாநாயகர், மேயர், ஆகியோர் கலந்து கொள்வர் என, அறிவிக்கப்பட்டது.

சமபந்திக்கு பிந்து: எனவே, கோவில் நிர்வாகிகள், விருந்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். பகல், 12:00 மணிக்கு, உணவு தயாரானது; பகல், 1:00 மணிக்கு, விருந்து சாப்பிட பக்தர்கள் திரண்டனர். ஆனால், கோவில் அதிகாரிகள், அமைச்சர் வந்த பிறகு தான், உணவு பரிமாறுவோம் என்றனர்.சாப்பிட வந்தவர்கள், வேறு வழியின்றி, அமைச்சர்களின் வருகைக்காக காத்திருந்தனர். நேற்று, சட்டசபை நடந்ததால், அமைச்சர்களால் உரிய நேரத்திற்கு வர இயலவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்ததால், சாப்பிட வந்தவர்கள் பசியில் துடித்தனர்.சிலர் உணவு வேண்டாம் எனக் கூறி, புறப்பட்டு சென்றனர். சிலர் அதிகாரி களிடம், வாக்குவாதம் செய்தனர். அவர்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். பிற்பகல், 2:25 மணிக்கு, சட்டசபை முடிந்தது.

மந்திரிகளுக்கு வாழ்த்து: அதன் பின், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர், கோவிலுக்கு விரைந்தனர். பெரும்பாலான கோவில்களில், 2:55 மணிக்கு, உணவு பரிமாறப்பட்டது. விருந்து சாப்பிட வந்தோர், அமைச்சர்களையும், அதிகாரிகளையும், திட்டியபடி சாப்பிட்டுச் சென்றனர். காலதாமதம் ஏற்படும் என தெரிந்திருந்தால், விருந்தை துவக்கும்படி, அமைச்சர்கள் கூறியிருக்கலாம் என, விருந்திற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar