வெள்ளக்கோவில்: வீரக்குமார சுவாமி கோவிலின் தேர் திருவிழா ஆரம்பப் பணிகள் திங்கள்கிழமை முறைப்படி துவங்கி வைக்கப்பட்டன. வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோவில் தேர் திருவிழா, பிப்ரவரி 28-இல் தொடங்கி மார்ச் 2-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. திருவிழாவின் ஆரம்பமாக தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி கோவில் குல முதன்மைதாரர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நேற்று காலை நடைபெற்றது.