Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரி மலை கோவிலில் உண்டியல் ... 25ம் தேதி திருவண்ணாமலையில் யோகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் இசை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2014
11:02

மதுரை: மதுரை சத்குரு சங்கீத சமாஜம் 62வது ஆண்டு இசை விழாவை முன்னிட்டு, ஜெ.ஏ.ஜெயந்தின் புல்லாங்குழல் கச்சேரி நடந்தது. இசைப்பரம்பரையில் வந்த ஜெயந்த் தனது குழலிசை கச்சேரியை, ஸ்வாதித் திருநாளின் காம்போதி ராக அடதான வர்ணத்தோடு தொடங்கினார். அவரது நேர்த்தியான வாசிப்பு, திஸ்ர, சதுஸ்ர நடையில் வர்ணத்திற்கு மேலும் வர்ணமூட்டியது. அடுத்ததாக, வசந்தா ராக தமிழ் கீர்த்தனை, கண்டேன் சீதையை, என்று துவங்கிய அருணாச்சல கவிராயரின் பாடலில், இசை வடிவில் ராமனையும் காட்டினார்.  ஆதி தாளத்தில் ஸ்வர பிரஸ்தாரம் அமோகம். ‘காபி’ ராக ஆலாபனையை இன்ஸ்டன்டாக தந்து விட்டு, தியாகராஜர் அருளிய ‘மீ வல்ல குண தோச மேமி’ என்ற கிருதி, கண்டசாபு தாளம், குழல் கருவியில், பாடலையும், கற்பனா  சுரங்களையும் அள்ளி தந்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். இக்கச்சேரியின் முதுகெலும்பாக பக்க வாத்திய கலைஞர்களை சொல்ல வேண்டும். வயலின் வாசித்த நாகை எஸ். ஸ்ரீராம் சிறந்த வித்வத்தை வெளிப்படுத்தினார். மிருதங்கம் வாசித்த மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், கச்சேரியை லயத்தால் அழகுபடுத்தினார். கடம் வாசித்த எஸ்.கார்த்திக், எப்போதும் போல் கச்சேரியை களை கட்ட செய்தார். அடுத்து, ஜெயந்த் சேனா ராகத்தில் தியாகராஜர் கீர்த்தனை விறுவிறுப்புடன் இருந்தது. மிக அரிதான, ‘விடஜாலதுர’ என்ற இந்த பாடலை, குழலில் வடிவமைத்த ஜெயந்தின் குழலிசை பாராட்டுக்குரியது. தொடர்ந்து கரஹரப்ரியா ராக ஆலாபனையை தொடங்கிய ஜெயந்த், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தார். வயலின் ஸ்ரீராம் பாரம்பரிய கரஹரப்ரியாவை வாசித்து நிறைவான ஆலாபனையை தந்தார். ராக ஆலாபனையை அடுத்து, ‘ராமநீஸமானம் வெரு’ என்ற ரூபக தாள கீர்த்தனை, தியாகராஜர் அருளியது. பாவ பூர்வமாக விளங்கிய பாடலை பிரமாதமாக ஜெயந்த் வாசித்து, சரண வரிகளை நிறவல் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உயர் நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar