கம்மாபுரம் : காவனூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கம்மாபுரம் அடுத்த காவனூர் மாரியம்மன் கோவிலில், சமயபுரம் மாரியம்மன் வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.அதையொட்டி, அன்று காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, காலை 10:00 மணிக்கு அம்மன் துதிப்பாடல் பஜனை, பகல் 12:00 மணிக்கு அன்னப்படையல் நிகழ்ச்சி நடந்தது.