Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆற்றுகால் பொங்கல் விழா பிப்.8ல் ... காஞ்சி காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்! காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கவுமாரியம்மன் கும்பாபிஷேக ஏற்பாடுகள்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2014
10:02

தேனி: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில்,கும்பாபிஷேக விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், முழு வீச்சில் முன் ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தேனியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில், பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. கவுமாரியம்மன், சுயம்புவாக தோன்றிய கோயில். அம்மன் பூஜித்த சிவலிங்கத்திற்கு, திருக்கண்ணீசுவரர் என பெயரிட்டார். இரண்டு கோயில்களும் இங்கு உள்ளன. பிப்.,9 ல் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கண்ணீஸ்வரமுடையார் கோயிலிலும், காலை 11 மணி முதல் 11.45 மணிக்குள் கவுமாரியம்மன் கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த பல மாதங்களாக பணிகள் நடந்து வருகிறது.

Default Image
Next News

கல் மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு, "பாலியூரித்திரின் பூச்சு பூசப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் கூட சுவரில் ஒட்டாது. கோபுரம் உள்ளிட்ட சிற்பங்களுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கவுமாரியம்மன் கோயிலில் உள்ள யாகசாலை மண்டபத்தில், 7 வேதிகை, 15 குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணீஸ்வரமுடையார் கோயிலில்,5 வேதிகை, 5 குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், ராஜாபட்டர் தலைமையில் 75 வேதவிற்பன்னர்கள் யாகசாலை பூஜை நடத்தி, கும்பாபிஷேகம் நடத்துகின்றனர்.

கும்பாபிஷேகம் முடிந்தவுடன், பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்க, அம்மன் கோயிலில் 6 நீர் தெளிப்பான் இயந்திரங்களும், கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் 21 நீர் தெளிப்பான் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்தவுடன், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கும்பாபிஷேகத்திற்காக, காசி,ராமேஸ்வரம், வைகை, சுருளி உள்ளிட்ட நதிகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்கள், வீரபாண்டி ஊரில் இருந்து யானை மீது தீர்த்தங்கள் வைத்து, ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜை காலங்களில், வேதசிவாகம திருமுறை பாராயணங்கள் நடை பெறும். பிப்.,6,7 தேதிகளில், இரவு 8.30 மணிக்கு மேல், ஆன்மிக சொற்பொழிவும், கும்பாபிஷேகம் முடிந்த அன்று மாலையில், வீரபாண்டி ஊரில் இருந்து, கலை நிகழ்ச்சிகளுடன் அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.கும்பாபிஷேகத்திற்காக, கோயிலில் முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பெரியாற்றில் நீர் திறக்கப்படுமா?: கும்பாபிஷேகம் நாள் அன்று, பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால், நீராடும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், விரிவான முறையில் செய்து தர வேண்டும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டாவது, போடி விலக்கில் இருந்து வீரபாண்டி கோயில் வரை உள்ள குண்டும், குழியுமான ரோட்டை சீர்படுத்தினால் நல்லது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar