Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகனுக்கு 45 பவுன் ... திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்துணர்வு முகாமில் பங்கேற்று மெலிந்து விட்ட பழநி யானை கஸ்தூரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 பிப்
2014
10:02

பழநி: மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமிலிருந்து வந்த, பழநி கோயில் யானை கஸ்தூரிக்கு, மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முகாமிற்கு சென்றுவந்த யானை 135 கிலோ எடை குறைந்துள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்காக, டிச., 18 ல், பழநி பெரிய நாயகியம்மன் கோயில் யானை கஸ்தூரி அழைத்து செல்லப்பட்டது. 47 வயதான கஸ்தூரி முகாமிற்கு சென்ற போது, 4,975 கிலோ எடை இருந்தது. தற்போது 135 கிலோ எடை குறைந்து, 4,840 கிலோவாக உள்ளது. மற்ற யானைகள் வாகனங்களில் ஏற, உதவிய கஸ்தூரி யானை கடைசியாக புறப்பட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு பழநிக்கு வந்தது. கஸ்தூரியை, ஊர்வலமாக, பெரிய நாயகியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு, வெள்ளிக் கொழுசு, தங்க முலாம் பட்டை, புத்தாடை அணிவிக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, ஆராத்தி எடுக்கப்பட்டது. அதன் பின், கோயில் வெளிப்பிரகாரத்தை வலம் வந்த கஸ்தூரி கொடிமரத்தை விழுந்து வணங்கியது. வழக்கமான இடத்திற்கு யானையை அழைத்து செல்லப்பட்டது. கால்நடை மருத்துவர் சக்திவேல்பாண்டி கூறுகையில் வனச்சூழல் நிறைந்த புத்துணர்வு முகாமில், கஸ்தூரி யானை மற்ற யானைகளுடன் நன்றாக பழகியது. தினமும், உடற்பயிற்சி, இயற்கை முறையில் சத்தான உணவு போன்ற காரணங்களால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, யானை புத்துணர்ச்சியுடன், ஆரோக்கியமாக உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar