ராமேஸ்வரம்: கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில், 48 நாள்கள் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி பங்கேற்றது, முகாம் முடிந்து நேற்று காலை கோயிலுக்கு திரும்பியது. அப்போது கோயில் குருக்கள் யானைக்கு, மகாதீபாரதனை, பூஜை செய்து வரவேற்றனர்.