வால்பாறை : வால்பாறையில் நடந்த பிரதோஷ பூஜையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில், காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு நேற்று மாலை 5.00 மணிக்கு பிரதோஷபூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் தேன், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், பால், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷ பூஜையில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.