Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எறிபத்தர் குருபூஜை: எதிரிகளையும் ... திருப்பதி செல்ல பக்தர்கள் அச்சம்! திருப்பதி செல்ல பக்தர்கள் அச்சம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டியம்மன் கோவிலில் நாளை தூக்குத்தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 பிப்
2014
10:02

மோகனூர்: ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் தூக்குத்தேர் திருவிழா, நாளை (பிப்., 19) நடக்கிறது. மோகனூர் அடுத்த ஒருவந்தூரில், பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தூக்குத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 13ம் தேதி காலை, 7.30 மணிக்கு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, இன்று (ஃபிப்.,18) காலை, 8 மணிக்கு, தேர் முகூர்த்தம் செய்து, ஜோடனை செய்யப்படுகிறது. நாளை (ஃபிப்., 19) அதிகாலை, 5 மணிக்கு, ஸ்வாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, தேர் உள்ளூர் சுற்று எடுத்துச் செல்லப்படுகிறது. வழிநெடுகிலும், ஏராளமான மக்கள், கிடா வெட்டி, ஸ்வாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மேலும், எல்லை உடைக்க வடுகப்பட்டி எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று இரவு, 8 மணிக்கு, வடுகப்பட்டியில் இருந்து, எடுத்துக்கட்டு சாவடிக்கு தேர் எடுத்துவரப்படுகிறது. ஃபிப்ரவரி, 20ம் தேதி, காலை, 9 மணி முதல், ஒருவந்தூர்புதூர், கணபதிபாளையம், செல்லிபாளையம், தொட்டிப்பட்டி, ஓடக்காட்டூர், குஞ்சாயூர், வடுக்கப்பட்டி ஆகிய பகுதிகளில், கிடா வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு, தேர் வடுக்கப்பட்டி எடுத்துச் சென்று, ஓடக்காரன் பூஜை, கிடா வெட்டு நடக்கிறது. பிப்ரவரி, 21ம் தேதி, மாவிளக்கு பூஜை நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு, தேர் எடுத்துக்கட்டி சாவடிக்கு எடுத்து வந்து அலங்காரம் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து உள்ளூர் சுற்றி வந்து கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு கிடாவெட்டும், வாணவேடிக்கையும் நடக்கிறது. பிப்ரவரி, 25ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar