திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணி முதல் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. விழாவுக்கு பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் தரிசனத்துக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.