Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நின்ற நாராயணப்பெருமாள் கோயில் கிழக்கு நுழைவு வாயில் திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2014
11:03

சிவகாசி : திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் திவ்விய தேசங்களில், 45வது தேசமாகும். இக்கோயிலுக்கு 5.20 ஏக்கர் நிலம் உள்ளது. கோயில் நிலம் பெரும் பகுதி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளது. இக்கோயிலின் தெற்கு நுழைவு வாயிலை, பல ஆண்டுகளாக பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் கோயில் கிழக்கு பகுதி நுழைவு வாயில் பயன்பாடு இன்றி இருந்தது. இந்நிலையில், கிழக்கு நுழைவு வாயில் படிக்கட்டிற்கும், கோயில் அலுவலக சுவருக்கும் இடையே உள்ள காலி இடத்தை, திருத்தங்கல் நகராட்சி, அரசு புறம்போக்கு இடம் என கூறி, அங்கன்வாடி மையம் கட்டி வருகிறது. கோயில் இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க, கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளது.இந்நிலையில், கோயிலின் தெற்கு நுழைவு வாயிலை மூடி, கிழக்கு நுழைவு வாயிலை திறந்து, பக்தர்கள் இதன்வழியாக வந்து செல்ல வசதி செய்துள்ளது கோயில் நிர்வாகம். கோயில் வாசலில் உள்ள காலி இடங்களை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த, கிழக்கு நுழைவு வாயிலை, தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். கோயில் நிர்வாக அதிகாரி அஜித் கூறுகையில், ""கோயிலின் பிரதான நுழைவு வாயில் கிழக்கு வாயில்தான். ஆகம விதிப்படி, கோயிலின் பிரதான நுழைவு வாயில், கிழக்கு பகுதியில் இருப்பது ஊருக்கும், கோயிலுக்கும் நல்லது. இதன் அடிப்படையிலும் பக்தர்கள் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கிழக்கு நுழைவு வாயில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, திருப்பதி கோவிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழா ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar