Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி ... பூவாலை அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை! பூவாலை அங்காளம்மன் கோவிலில் மயானக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உண்மையான பக்தி இருந்தால், உயர்ந்த நிலையை அடையலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2014
12:03

திருப்பூர்: உண்மையான பக்தியுடன், இறைவனின் நாமத்தை சொன்னால், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம், என, சொற்பொழிவாளர் முரளீதர சுவாமிகள் பேசினார். ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு, திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் நடந்து வருகிறது. சொற்பொழிவாளர் முரளீதர சுவாமிகள் பேசியதாவது: திருமங்கையாழ்வர் என்ற பக்தர், வழிப்பறி செய்வார்; பணம், நகைகளை திருடுவார். அந்த பணத்தில், அடியவர்

களுக்கு அன்னதானம் செய்வார். கர்ணன் சொர்க்கத்துக்கு சென்றபோது, அங்கிருந்தவர்களுக்கு பசிக்கவில்லை. கர்ணனுக்கு பசித்தது. கிருஷ்ணர் அங்கு வந்தபோது, இதுபற்றி கர்ணன் கேட்டார். அதற்கு கிருஷ்ணர், "எல்லா தானதர்மம் செய்தாலும், நீ அன்னதானம் செய்யவில்லை; அதனால், பசிக்கிறது, என்றார். காசு, பணம் கொடுத்து ஒருவனை திருப்திப்படுத்த முடியாது. பசித்தவனுக்கு அன்னமிட்டால், அவன் திருப்தியடைவான். அன்னம் கொடுத்தவன், உயிர் கொடுத்தவனாகிறான். "நாராயண என்ற சொல்லில் இருந்து "ராவையும், "நமசிவாய என்ற சொல்லில் இருந்து "ம என்ற எழுத்துகளை எடுத்து "ராம நாமம் சொன்னால், சிவன், விஷ்ணு இருவரையும் வழிபட்ட பலன் கிடைக்கிறது. ராம நாமம் என நாம கீர்த்தனம் செய்பவர்களுக்கு எல்லாம் கிடைக்கும் என மகான்கள் கூறுகின்றனர். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள், என்றால், பிராணன் என்ற உயிர்காற்று உள்ளபோது, உயிரோடு இருக்கும்போதே இறைவனை துதித்துக் கொள்ள வேண்டும் என அர்த்தம். ஒருவன் இறந்தால், அவனது சொத்து, வீடு, உறவு உடன் வராது; அவன் செய்த தானமும், தர்மமும் கூட வரும். அதையே, "தனக்கு மிஞ்சியது தானமும் தர்மம், என்றனர். இதை, தனக்கு வைத்துக்கொண்டு மிஞ்சியதை

பிறருக்கு தானம், தர்மம் செய்வது என தவறாக நினைக்கின்றனர். தவறு செய்தவன் இறைவனிடம், "இனி தவறு செய்ய மாட்டேன், காப்பாற்று என, வேண்டுகிறான். இறைவன் காப்பாற்றி விட்டால், இது தானாக நடந்ததா, இறைவன் காப்பாற்றினாரா என சந்தேகப்படுகிறான். மீண்டும் தவறு செய்கிறான். ஒரு தவறுக்கு பிராயசித்தம் தேடும் முன் அடுத்த தவறை செய்கிறான். மகன், முட்டாளாய் இருந்தால், தந்தைக்கு அவமானம். தன்னுடைய பக்தன், கெட்ட

வனாக இருக்க இறைவன் விட மாட்டான். உண்மையான பக்தியுடன் இறைவனை வழிபட்டால், அவன் தவறுக்கு பிராயசித்தமும் கிடைக்கும். மீண்டும் தவறு செய்யாதவாறு, இறைவன், அவனை வழிநடத்திச் செல் வான். உண்மையான பக்தியுடன் இறைவன் நாமம் சொன்னால், உயர்ந்த நிலையை அடையலாம். இவ்வாறு, முரளீதர சுவாமிகள் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar