Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் கோவில் மணி பெல்லில் ... பழநி கோவில் உண்டியல் வசூல்: ரூ.1.40 கோடி! பழநி கோவில் உண்டியல் வசூல்: ரூ.1.40 கோடி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் நரசிம்மர் திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 மார்
2014
10:03

நாமக்கல்: நரசிம்மர் ஸ்வாமி கோவில் திருத்தேர் பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற நரசிம்மர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் திருத்தேர் பெருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று காலை, 9.30 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 மணிக்கு திருமஞ்சனம், ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இரவு, அன்ன வாகனத்தில், ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, இன்று (மார்ச், 11) முதல், 16ம் தேதி வரை, காலை, 10 மணிக்கு திருமஞ்சனம், இரவு, 7 மணிக்கு, சிம்மம், அனுமந்தம், கருடன், சேஷ, யானை வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்ச், 16ம் தேதி மாலை, 6 மணிக்கு, திருமாங்கல்ய தாரணம் நடக்கிறது. திருக்கல்யாணத்தில், பக்தர்கள் இறைவனுக்கு மொய் சமர்ப்பிக்கின்றனர். தொடர்ந்து, மாங்கல்ய பொட்டு, பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை மற்றும் மின் அலங்காரம் நடக்கிறது. மார்ச், 17ம் தேதி காலை, 10 மணிக்கு, திருமஞ்சனம், தீர்த்தவாரி பல்லக்கு புறப்பாடும், இரவு, 7 மணிக்கு குதிவர வாகனத்தில் திருவீதி உலா, திருவேடுபரி உற்சவம் நடக்கிறது. 18ம் தேதி திருத்தேர் பெருவிழா கோலாகலமாக நடக்கிறது. அன்று காலை, 7.35 மணிக்கு, கோட்டை நரசிம்மர் திருத்தேர் வடம் பிடித்தல், மாலை, 4.35 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், 19 முதல், 23ம் தேதி வரை, தினமும் காலை, திருமஞ்சனம், இரவு, 7 மணிக்கு வசந்த, விடையாற்றி மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் கிருஷ்ணன், செயல் அலுவலர் சபர்மதி, நிர்வாகிகள், பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar