பதிவு செய்த நாள்
11
மார்
2014
10:03
பழநி: பழநி மலைக்கோவில் உண்டியலில், 20 நாட்களில், ஒரு கோடியே 40 லட்சத்தி 38 ஆயிரத்தி 540 ரூபாய் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், தங்கம், 588 கிராம், வெள்ளி, 10 ஆயிரத்து 500 கிராம், வெளிநாட்டு கரன்சி 551, ரொக்கமாக, ஒரு கோடியே 40 லட்சத்தி 38 ஆயிரத்து 540 ரூபாய், 20 நாட்களில் வசூலாகியுள்ளது. இதில், தங்கம், வெள்ளியிலான தாலி, ஆள்ரூபம், செயின், பாதம், வேல், மோதிரம், கொலுசு, காசுகள் என, காணிக்கை பொருட்கள் கிடைத்துள்ளது.