கமுதி: கமுதி வீரமாகாளியம்மன், சுடலை மாடசாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் 14ல் நடைபெறுகிறது. வீரமாகாளியம்மன் கோயிலில் 14ம் தேதி இரவு 7 மணியளவில் மாசி பாரிவேட்டைத் திருவிழா துவங்குகிறது. பின்னர் வீரமாகாளியம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பொங்கல் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இரவில் சுடலை மாடசாமிக்கு குருதிப்பலி பூஜையும், படையல் பூஜையும் நடைபெற உள்ளது.