Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துர்க்கை அம்மன் சிலை திருட்டு! செம்பை சங்கீத உற்சவம் இன்று நிறைவு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்களுக்கும் நடுகல் நடும் வழக்கம் இருந்தது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2014
10:03

சென்னை: வீரர்கள் இறந்தவுடன், நடுகல் நடும் மரபு, பல மாநிலங்களில் இருந்துள்ளது. ஆண்களுக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கும் நடுகல் அமைக்கப்பட்டது, என, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், நாகசாமி கூறினார். சங்க இலக்கியத்தில் பிரதிபலிக்கும் இரும்பு கால பண்பாடு என்ற தலைப்பில், மூன்று நாள், சிறப்பு கருத்தரங்கின் துவக்க விழா, சென்னை, விவேகானந்தா கல்லூரியில், நேற்று நடந்தது. இக்கருத்தரங்கை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமான, ரீச் மற்றும் விவேகானந்தா கல்லூரியின் தமிழ் மற்றும் வரலாற்று துறை இணைந்து நடத்துகின்றன. இதில், விவேகானந்தா கல்லூரியின், முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். கருத்தரங்கின் தலைப்பு குறித்து, ரீச் நிறுவனத்தின் தலைவர், சத்திய மூர்த்தி விளக்கினார்.

தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், நாகசாமி, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், சங்க இலக்கியத்தைச் சேர்ந்தவை. 2,800 செய்யுள் கொண்ட, சங்க இலக்கியத்தில், 2,400க்கும் மேற்பட்ட செய்யுள்கள், அகப்பாடல்களாக, எழுதப்பட்டுள்ளன. குறைவான செய்யுள்களே, புறப்பாடல்களாக எழுதப்பட்டுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளில் வாழ்ந்த மக்களின் பதிவுகளாக, புறப்பாடல்கள் உள்ளன. இருப்பினும், சங்க காலத்தின் குறிப்பிட்ட காலம் குறித்து, பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சங்க கால மக்களின் வாழ்வில், இரும்பின் பயன்பாடு அதிகளவில் இருந்தது. அக்காலத்தில், பண்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தனர். வீரர்கள் இறந்தவுடன், அவர்களின் நினைவை போற்றும் விதமாக, நடுகல் நடும் மரபு, நம் முன்னோர்களிடம், இருந்துள்ளது. இம்மரபு, தமிழகத்தில் மட்டுமல்லாது, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்துள்ளது, அங்கு கிடைத்த நடுகற்கள் மூலம் தெரிய வந்துள்ளன. இக்கற்கள், ஆண்களுக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவும், தமிழகத்தின் சங்க காலத்தை சார்ந்தது. இது போன்ற தகவல்களை, தொல்லியல் ஆய்வின் மூலம் அறிய முடியும். அறிவியலை போலவே, தொல்லியல் ஆய்வுகள் இருக்கும். இதில், தற்சார்பு என்பதே இல்லை. மாணவர்கள், தொல்லியல் படிப்பதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar