Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி ஒப்பாரி பூஜை! சவுடேஸ்வரி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரிமங்கலம் மலைக்கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2014
11:03

காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காரிமங்கலம் ஸ்ரீ அபிஜ குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நேற்று காலை, 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன், உத்திரபெருவிழா துவங்கியது. இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை, ஸ்வாமி சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மதியம், 12 மணிக்கு இந்தியன் ஆயில் டீலர் சண்முகம் குடும்பத்தின் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை, 13ம் தேதி ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், மதியம், 12 மணிக்கு எச்சனம்பட்டி ராமன் மற்றும் குழுவினர் சார்பில் அன்னதானமும், இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், 14ம் தேதி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம், 12 மணிக்கு, தொழிலதிபர் ஸ்ரீ சிவம் குடும்பத்தினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை, ஸ்வாமி சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. 16ம் தேதி, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, காலை, 7 மணிக்கு, ஸ்வாமி சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், 10 மணிக்கு ஸ்வாமி தேர் ஏறும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி வரும் நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைக்கிறார். 17ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், கொடி இறக்கமும் நடக்கிறது. விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், சீனிவாசன், குருக்கள் புருஷோத்தன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar