திருப்போரூர்: கடந்த 2012ம் ஆண்டு ஜுலை மாதம் ராஜகோபுரம் உள்பட உள் பிரகார சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலின் பிரதான மூலஸ்தானம் உள் சன்னதி விமானம் ஆகியவை திருப்பணி செய்ய வேண்டி இருப்பதால் மூலவர் சன்னதியை மூடுவதற்காக பாலாலய பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.