Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் திருத்தேர் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மார்
2014
10:03

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில், ஏழாம் நாளான நேற்று, திருத்தேர் உற்சவம் நடந்தது. இதில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர், காலை 6:௦௫ மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், காலை 8:20 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இதில், சிவனடியார்கள் சிவனுக்கு உகந்த மேள தாளங்களை வாசித்து, பரவசமடைந்தனர். மேலும், பெண் சிவனடியார்கள் கும்மியடித்து, தேரை வரவேற்றனர். நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்த திருத்தேர், பகல் 12:௪௫ மணிக்கு நிலைக்கு சென்றடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் வெள்ளித்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார்.பூதபுரீஸ்வரர் தேர் திருவிழா: ஸ்ரீபெரும்புதூர் சவுந்தரவள்ளி அம்பாள் உடனுறை பூதபுரீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான, நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை 8:00 மணிக்கு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, திருத்தேரில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளினார். தேரை சிவனடியார்கள், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பிற்பகல் 12:30 மணிக்கு, நிலைக்கு வந்து சேர்ந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar