திண்டிவனம்: திண்டிவனம் சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்நேற்று காலை நடந்தது.திண்டிவனம் சஞ்சீவிரயன்பேட்டை பகுதியில்உள்ளது சச்சிதானந்தவள்ளி சமேத சதனபுரீஸ்வரர் கோவில். இக் கோவிலில் கடந்த 5 ம் தேதிமுதல் ஆண்டு பெருவிழா நடந்து வருகிறது. விழாநாட்களில் தினம் மாலை 7மணிக்கு, சுவாமியும் அம்பாளும் கோவில் வலம்வந்தனர். நேற்று முன்தினம் (12 ம் தேதி) இரவு 7மணிக்கு திருக்கல்யாணஉற்சவம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று காலை 7 மணிக்குதேரோட்டம் துவங்கியது. இன்று தீர்த்தவாரி உற்சவம், நாளை விடையாற்றிநடக்கிறது.