திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை தர்காவில் 712ம் ஆண்டு கந்தூரி விழாவில் ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர். திருவாரூர்
மாவட்டம்,முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் 14 நாட்கள் நடக்கும்
கந்தூரி விழாவில் இந்தியாவில் பல்வேறு பகுதியில் ஆயி ரக்கணக்கானோர்
ஆண்டுதோறும் பங்கேற்று வருகின்றனர். தற்போது 712ம் ஆண்டு கந்தூரி விழாவை
முன்னிட்டு கடந்த 2 ம்தேதி மாலை கொடி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது. தர்கா
முதன்மை அறங்காவலர் பாகக்அலி சாஹிப் தலைமையில் புனித தாவூதியா மஜ்லி ஸில்
ஷேக் தாவுது, துஆ., ஓதிய பின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று
முன் தினம் 12ம்தேதி கந்தூரி விழா வை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம்
நடந்தது.இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று சிறப்பு
தொழுகை நடத்தினர்.