நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அடுத்த நல்லாத்துார் சுவர்ணபுரீஸ்வர் கோவிலில் உள்ள பைரவ பெருமானுக்கு பவுர்ணமி விழா நடந்தது. இதனையொட்டி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவில் நல்லாத்துார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.