திருப்போரூர்:திருப்போரூர், கந்தசுவாமி கோவில் சரவணப் பொய்கை குளத்தில், நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில், பன்றி ஒன்று இறந்து மிதந்தது. கோவில் நிர்வாகத்தினர் அதனை மீட்டு புதைத்தனர். இச்சம்பவம் பக்தர் களுக்கு, வேதனையை ஏற்படுத்தியதால், நேற்று காலை 9:00 மணிக்கு, சரவணப் பொய்கை ஒட்டிய காவடி மண்டபத்தில், பரிகார பூஜை நடத்தப்பட்டது.