மானாமதுரை: வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை 7 நாள்கள் மழை வேண்டி வருண ஜெப யாகம் நடத்தப்படுகிறது. இன்று காலையில் கணபதிஹோமத்துடன் தொடங்கிய இந்த யாகம் தொடர்ந்து 30ம் தேதி வரை நடைபெறுகிறது.