கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் இளநீர் அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2014 03:03
கன்னியாகுமரி: 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோயிலில், கோடை வெப்பம் நீங்கி, மழை பெய்ய வேண்டி ஏப்.1ல் 1,008 இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது. மாவட்டத்திலேயே உயரமான சிவலிங்கம் இக்கோயிலில் அமைந்துள்ளது சிறப்பாகும்.