உடுமலை : உடுமலை, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை 4.30 மணிக்கு சுவாமிக்கு 16 திரவியங்களில், அபிேஷகம் பூஜை நடந்தது. உடுமலை ரத்தின லிங்கேஸ்வரர், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், தாண்டேஸ்வரர் கோவில்களில், நேற்று சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷக பூஜைகள் நடந்தன.