ராமநாதபுரம் முருகன் கோயில்களில் ஏப்.13ல் பங்குனி உத்திர விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2014 10:04
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.4ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்தலத்தில் கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. பங்குனி விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏப்.13ல் பங்குனி உத்திரத்தன்று காலை பக்தர்கள், நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து காவடிகள், பால்குடம் எடுத்து கோயிலை அடைகின்றனர். அன்றிரவு தீ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. குயவன்குடி சுப்பையா சாது சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா ஏப்.3ல் துவங்குகிறது. தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கின்றன. ஏப். 13 அதிகாலை 3 மணிக்கு பூக்குழி நிகழ்ச்சி நடக்கிறது. மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள கதிர்காம சக்தி வடிவேல் முருகன் கோயில், பங்குனி உத்திர திருவிழா ஏப்.3லிலும், காந்திநகர் சண்முக சடாச்சர சக்திவடிவேல் முருகன் கோயிலில் ஏப்.4லிலும் பங்குனி உத்திர விழா துவங்குகிறது. பங்குனி உத்திர தினத்தன்று, தென் கடல் சித்தி விநாயகர் கோயில் இருந்து காவடிகள், பால்குடம் எடுத்து பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். அன்றிரவு 10 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.