செஞ்சி: செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பகல் ஒரு மணிக்கும், இரவு 7 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 7 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். வாணவேடிக்கை மற்றும் இசை பட்டிமன்றம் நடந்தது. அறங்காவலர் புண்ணியமூர்த்தி, விழா குழுவினர், பக்தர்கள் கலந்து கொண்டனர்.