சிதம்பரம், ; சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள ஸ்ரீதில்லைக் காளியம்மன் கோயிலில், தில்லைக்காளிக்கு பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகம் மற்றும் 154-வது சிறப்பு அர்த்தசாம பூஜை இரவு நடைபெற்றது.கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுண்டி சந்நிதியில் நெய் தீப ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது.பின்னர், தில்லைக் காளியம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.