செஞ்சி : செஞ்சி வட்டம், அவலூர்பேட்டை அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தெலுங்கு வருடப் பிறப்பு யுகாதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமாக வேப்பிலை வெல்லம் அரைத்து வழங்கப்பட்டது. மாலையில் தீப வழிபாடும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அம்மன் இரவு உற்சவ மூர்த்தியுடன் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடந்தது.