ஸ்ரீரங்கம் கோவிலில் 5-ம் தேதி பங்குனி தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2014 12:04
ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா வரும் 5-ம்ந் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடக்கிறது.. இதையொட்டி அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு கொடியேற்ற மண்டபம் சென்றடைகிறார். 5 மணியளவில் கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றம் முடிவடைந்ததும் காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகி 7 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார். விழா முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் . 13-ம் தேதி நடைபெறுகிறது.