நாகூர்மீரான் ஷாகிப் ஹமீது ஆண்டவர் தர்காவில் கொடி ஏற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2014 11:04
உச்சிப்புளி : உச்சிப்புளி,என்மணங்கொண்டான் பகுதியில் உள்ள,நாகூர்மீரான் ஷாகிப் ஹமீது ஆண்டவர் தர்காவில், கந்தூரி விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் மாலை கொடியேற்றம் நடந்தது. இதில் விழாக்குழுவினர், ஜமாத் நிர்வாகிகள், உஸ்வத்துள் ஹஸனா இளைஞர் மன்றத்தினர் பங்கேற்றனர். ஏப்.,10 மாலை 4.30 மணிக்கு கந்தூரி விழா, ஏப்.,14ல் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.