கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவின் 3-ஆம் நாளான நேற்று கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து யானைகள் மூலம் புனிதநீர் எடுத்து வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.