Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்கத்தில் வேணுகோபால பார்த்த சாரதி ... கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஸ்திரேலிய கலைக்கூடத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிலை அகற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஏப்
2014
12:04

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, அர்த்தநாரிஸ்வரர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில், பஞ்சலோகத்தால் ஆன நடராஜர் சிலை திருடப்பட்டது. இது போல், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஒரே கல்லில் செய்யப்பட்ட பிரமாண்டமான அர்த்தநாரீஸ்வரர் சிலையும் திருடப்பட்டது. இந்த சிலைகளை கடத்திச் சென்று, ஆஸ்திரேலியாவில் விற்ற, சிலை கடத்தல்காரன், சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டு, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை, தற்போது ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் உள்ள கலைக்கூடத்தில் உள்ளது. இந்த சிலையை ஒப்படைக்கும் படி மத்திய அரசு கோருவதால், அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை சமீபத்தில் அகற்றப்பட்டது. இதே போல நியூசவுத்வேல்ஸ் பகுதி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த, அர்த்தநாரீஸ்வரர் சிலையும், நேற்று முன்தினம், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து "இந்தியா விஷன் மையத்தின் நிர்வாக அதிகாரி, வினோத் டேனியல் கூறியதாவது: நடராஜர் சிலையும் அர்த்தநாரீஸ்வரர் சிலையும் இந்தியாவில் வழிபடப்படுகின்றன. இந்த சிலைகளை ஒப்படைக்கும் படி, இந்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த சிலைகள் ஒப்படைக்கப்பட வேண்டும். இது குறித்து ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 2000ல், ஆஸ்திரேலிய கலைக்கூடங்களிலிருந்து, 33 பொருட்கள், சென்னை அருங்காட்சியகத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, வினோத் டேனியல் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar