Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் ... செங்கல்பட்டு பாலமுருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் வழங்கும் விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2014
10:04

மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில், திருமுலைப்பால் வழங்கிய நிகழ்வில், ஆயிரக்கணக்காண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்டம், சீர்காழியில், சட்டைநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள பிரம்மதீர்த்த குளக்கரையில், திருஞான சம்பந்தருக்கு, அம்பாள் ஞானப்பால் கொடுத்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், திருமுலைப்பால் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

Default Image
Next News

சிறப்பு அபிஷேகம் : நேற்று, தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், விழா நடந்தது. கோவிலில், தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்தருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நேற்று காலை நடந்தன. பிற்பகல், 2:15 மணிக்கு, உமையம்மை புஷ்ப பல்லக்கில், பிரம்மதீர்த்த குளக்கரையில் எழுந்தருளிய திருஞானசம்பந்தருக்கு, தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்குவது நிகழ்த்திக் காட்டப்பட்டது. அதையடுத்து, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில், பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளி, திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தனர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பலா, வாழை, பேரிட்சை பழங்கள், சர்க்கரை கலந்த பாலை, சுவாமி அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, குழந்தைகள் ஞானம்பெற பிரார்த்தனை செய்தனர். மாலை, திருஞானசம்பந்தர் பல்லக்கில் முக்கிய வீதிகள் வழியாக, ஓசைநாயகி சமேத தாளபுரீசுவரர் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு பதிகம் பாடப்பட்டு, சீர்காழி பிரம்மபுரீஸ்வர சுவாமி கோவிலுக்கு மீண்டருளும் நிகழ்ச்சி, இரவு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar