அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2014 11:04
பவானி : ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 20ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் திருவீதி உலõவும் நடந்தது விழா முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் குண்டம் இறங்க கோவில் முன்பாக 60 அடி நீளத்தில் குண்டம் திறக்கப்பட்டு நாளை ஏப். 9-ம் தேதி ) பூக் குண்ட நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பரி வேட்டையும், வசந்தோற்சவமும் நடைபெறுகிறது.