பதிவு செய்த நாள்
10
ஏப்
2014
03:04
போடி,: போடி பரமசிவன் கோயில் கொடியேற்று விழா, அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர்கள் பேச்சிமுத்து,முத்துராமலிங்கம், நிர்வாகஸ்தர்கள் ராஜாராம், ஆறுமுகம், நகராட்சி கவுன்சிலர் மகேந்திரன், சிங்கார வேலன் பழனி பாதயாத்திரை குழுவினர், வர்த்தகர்கள் சங்கம் மற்றும் அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, நேற்று காலை 9 மணி அளவில் பெரியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜையுடன் துவங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிமரம் கொண்டு செல்லப்பட்டது. காலை 11.30 மணிக்கு பரமசிவன் கோயிலில் கொடியேற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகளும் நடந்தன. சித்திரை திருவிழா, ஏப்., 15 ல் துவங்கி 25 வரை நடக்கிறது.