Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்டாலின் மனைவி துர்கா ... ராசிபுரம் மாரியம்மன் கோயில் பூக்குண்டம் விழா ராசிபுரம் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் நிதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஏப்
2014
11:04

திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா அன்னம் புத்தூர் கிராமத்தில் புனரமைப்பு செய்யபட்ட கனக திரிபுரசுந்தரி அம்பிகா சமேத நிதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 6 ம் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. 7 ம் தேதி காலை இரண்டாம் காலமும், இரவு 8 மணிக்கு மூன்றாம் காலமும், 8 ம் தேதி காலை நான்காம் காலமும், இரவு 8 மணிக்கு ஐந்தாம் காலமும், நேற்று முன்தினம் காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிந்தது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை அர்ச்சகர் பிச்சை குருக்கள், காலை 10.15 மணிக்கு மூலவர் விமான கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அதே நேரத்தில், அம்பாள், விநாயகர், முருகர், பைரவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் சன்ன தி களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கும் அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானங்கள் வழங்கபட்டது. பிச்சை குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ கார்த்திகேயன் உள்ளிட்ட குருக்கள் குழுவினர் யாக சாலை பூஜைகளை நடத்தினர். வீரமணி ராஜூ குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது, பக்தி சொற்பொழிவுகள், பரதநாட்டியம் நடந்தன. சிவ வாத்தியங்கள் முழங்கபட்டது. திருமறை, பன்னிரு திருமுறைகள் பாராயணம் செய்தனர். ஸ்தபதி முனைவர் பன்னீர் செல்வம், திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து திருமண கோலத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar