Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராசிபுரம் மாரியம்மன் கோயில் ... சேலம் ஐய்யந்திருமாளிகை  மாரியம்மன் கோவில் பங்குனி விழா! சேலம் ஐய்யந்திருமாளிகை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் தேரோட்டத்திற்கு குடிநீர் திட்டத்தால் சிக்கல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஏப்
2014
11:04

ஸ்ரீபெரும்புதூர் : ஆதிகேசவப் பெருமாள் கோவில், தேர் திருவிழா நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக, பயன்படுத்தாமல் மூடிக்கிடந்த தேரை, இவ்வாண்டு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாலைகள் சேதம்: ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், மணவாள மாமுனிகள் கோவில் ஆகிய சன்னிதிகள், ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்சவத்தின் 7வது நாள், ஆதிகேசவப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வருவார். இதற்காக இருந்த பழமையான தேர் பழுதடைந்ததால், கடந்த, ௨௦௦௪ம் ஆண்டு புதிய தேர் செய்யப்பட்டு, அன்று முதல் ஆண்டுதோறும் புதிய தேரில் சுவாமி திருத்தேரோட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த ௨௦௧௩ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், நகர்ப்புற மேம்பாட்டு உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில், குடிநீர் திட்டம் அமைக்கும் பணி ௪௦.௭௧ கோடி செலவில், நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக, பேரூராட்சி முழுவதும், முக்கிய சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

மாற்று ஏற்பாடு: ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருத்தேர் நிறுத்தப்பட்டுள்ள தேரடி வீதி மற்றும் தேர் சுற்றி வரும் காந்தி சாலையிலும், குடிநீர் குழாய் புதைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், நிலையிலிருந்து தேரை இழுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதன்படி, வரும் 15ம் தேதி, கொடியேற்றத்துடன், பிரம்மோற்சவ விழா துவங்க உள்ளது. இதனால், மணவாள மாமுனிகள் கோவிலுக்கு சொந்தமான, சிறிய தேரில், ஆதிகேசவப்பெருமாள், திருவீதி உலா வைபவமும் நடத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, பயன்பாடில்லாமல், மூடிக்கிடந்த தேரை, பிரம்மோற்சவத்திற்கு பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை ஸ்தபதி ஆய்வு செய்ய உள்ளார். அதன்பின், பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கிய பின், தேர் பயன்பாட்டிற்கு வரும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar