இடிக்காமல் நகர்த்த பட்ட.. ஆம்பூர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2014 12:04
வேலூர்: ஆம்பூர் அடுத்த அய்யனூரில் சாலையோரம், ஆதி பெத்தபள்ளி கங்கையம்மன் கோவில் உள்ளது. சென்னை - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை, ஆறு வழிச்சாலையாக மாற்றப்படுவதால், இக்கோவிலை இடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதற்கு, ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவிலை இடிக்காமல், 40 அடி பின்னோக்கி நகர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அரியானாவைச் சேர்ந்த அவுஸ் லிப்டிங் சர்விஸ் இந்தியா நிறுவனம், கோவிலை நகர்த்தும் பணியில் ஈடுபட்டது. கோவிலின் கடக்காலை சிறிது, சிறிதாக உடைத்து, அதன் கீழ் பலமான ஜாக்கிகள், தண்டவாளங்கள் பொருத்தி, 10ம் தேதியன்று ஜாக்கிகளின் மீது கோவில் வைக்கப்பட்டது. அதன்பின், 40 அடி தூரத்துக்கு, நீண்ட செங்கல் ஸ்லாப்புக்கள் வைத்து இடிக்காமல் கோயில் நகர்த்தி வைக்கப்பட்டது. நேற்று இக்கோயிலின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.