அந்தியூர்: ஈரோடு அந்தியூர் அருகே வேம்பத்தியில் சொக்கநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண்கள், கைக்குழந்தையுடன் சிலர் என ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். . நேற்று அம்மன் வீதிஉலõவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது.