கருத்தம்பட்டி: முத்துக்கவுண்டன்புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் மற்றும் கொள்ளுப்பாளையம் மாகாளியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில், உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை ஏப்.14-ம் தேதி மாலை 4:00 மணிக்கு துவங்குகிறது. அவிநாசி ரோடு சங்கோதி பாளையம் பிரிவில் நடக்கும் பூஜையை அலகுமலை ஸ்ரீதபோவனத்தைச் சேர்ந்த சுவாமினிகுப்பிரியானந்த சரஸ்வதி நடத்தி வைக்கிறார்.