சென்னிமலை ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 11–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.